சம்பளத்தில் விஜய்யை முந்தினாரா அல்லு அர்ஜுன்?

vinoth
திங்கள், 28 அக்டோபர் 2024 (07:57 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. இந்த படத்துக்கு ரிலீஸுக்கு முன்பே 1000 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சம்பளமாக இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற விகிதத்தில் அல்லு அர்ஜுன் இந்த படத்துக்கு 300 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெற்றவர் என்ற விஜய்யின் சாதனையை அல்லு அர்ஜுன் முறியடித்துள்ளார். விஜய் தன்னுடைய கடைசி படத்துக்கு 275 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments