Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னைப் பற்றியான தகவல்கள் அனைத்தும் வதந்தி: ரம்பா பகீர்

என்னைப் பற்றியான தகவல்கள் அனைத்தும் வதந்தி: ரம்பா பகீர்
, புதன், 26 அக்டோபர் 2016 (18:20 IST)
என் திருமண வாழ்க்கை குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி என நடிகை ரம்பா பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.


 

நடிகை ரம்பா தனது கணவரிடமிருந்து விவகாரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக நேற்று காலை செய்தி பரவியது. ஆனால், பிரிந்திருக்கும் தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரித்தான் அவர் மனு செய்தார் என்று நேற்று மாலை செய்தி வெளியானது.
 
இந்நிலையில், இந்த தகவலை நடிகை ரம்பா முற்றிலுமாக மறுத்துள்ளார்.
 
இது குறித்து கூறியுள்ள அவர், ”என் திருமண வாழ்க்கை பற்றி வதந்தி பரவியுள்ளதாக என சகோதரர் மூலம் தான் எனக்கு தகவல் கிடைத்தது.
 
நான் விவாகரத்து கோரியிருந்தால் நீதிமன்றத்தில் அதற்கான பதிவு இருக்கும் அல்லவா? நீதிமன்றம் நான் நீதிமன்றத்திற்கு வந்திருந்தால் மக்களுக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்குமா இல்லையா? என் திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜீத் நடித்த ‘வீரம்’ தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கிறார்