Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் அக்ஷரா ஹாசன்?

சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் அக்ஷரா ஹாசன்?
, சனி, 23 மே 2015 (15:17 IST)
அஞ்சான் படப்பிடிப்பின் போது, அடுத்து கார்த்தியை வைத்து எண்ணி ஏழேநாள் என்ற படத்தை எடுக்கப் போவதாக லிங்குசாமி கூறினார். அஞ்சான் ப்ளாப்பானதும் தப்பிச்சோம்டா என்று விலகி ஓடினார் கார்த்தி. ஸ்கிரிப்டை முடிக்க நேரம் கேட்டிருக்கிறேன், ஆறு மாசத்தில் தொடங்கும் என்று லிங்குசாமி உருண்டாலும், எண்ணி ஏழேநாள் இனி டேக் ஆஃப் ஆகாது என்கின்றனர். லிங்குசாமியும் அதனை ஓரமாக வைத்து சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் கவனமாகியிருக்கிறார்.
இதில் விஷால் ஜோடியாக நடிக்க கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசனிடம் கேட்க உள்ளனர்.
 
இந்திப் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த அக்ஷரா, பால்கியின் ஷமிதாப் படத்தில் நடிகையானார். அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அவரை சண்டக்கோழி இரண்டாம் பாகத்தின் மூலம் தமிழுக்கு கொண்டுவர விரும்புகிறாராம் லிங்குசாமி.
 
லிங்குசாமி விரும்பி வைத்துக் கொண்ட உத்தம வில்லன் சூடே இன்னும் ஆறவில்லை. அதற்குள் இன்னொரு விருப்பம். எதையும் தாங்கும் இதயம் பாஸ் உங்களுக்கு.

Share this Story:

Follow Webdunia tamil