சாத்தான்குளம் விவகாரம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ், வரலட்சுமி டுவிட்

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (19:38 IST)
சாத்தான்குளம் விவகாரம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ், வரலட்சுமி டுவிட்
சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை மகன் வியாபாரிகள் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் திடீரென அவர்கள் மர்மமாக மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி தற்போது அகில இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது என்பதும் ராகுல் காந்தி உள்பட பல அகில இந்திய அரசியல் தலைவர்கள் இதுகுறித்து தங்களுடைய சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் எப்போதும் இல்லாத அளவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலர் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் வரலட்சுமி ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:
 
ஐஸ்வர்யா ராஜேஷ்: சாத்தான்குளம் சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது என்றும் முழுக்க முழுக்க இது ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்றும் அவர்களுக்கான நீதி தாமதமானால் அநீதியானது 
 
வரலட்சுமி: ‘சாத்தான்குளம் காவல் துறையினரின் நடத்தையைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும். அதே நேரத்தில் இந்த சம்பவத்தை வைத்து நாம் ஒட்டுமொத்த காவல்துறையையும் குறைகூற முடியாது. ஆனால் அந்த இரண்டு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

சிம்புவின் ‘அரசன்’ படத்துக்குத் தெலுங்கில் இதுதான் பெயர்….!

அடுத்த கட்டுரையில்
Show comments