Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்பார்த்தது போலவே ஐஸ்வர்யாவை காப்பாற்றிய யாஷிகா: இது நியாயமா பிக்பாஸ்?

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (22:01 IST)
இந்த பிக்பாஸ் சீசனில் பார்வையாளர்களுக்கு அதிகபட்ச வெறுப்பை தந்தவர் என்றால் அது ஐஸ்வர்யாதான். இதனை அவர் வெளியே வந்தவுடன் புரிந்து கொள்வார். ஜூலி, காயத்ரியை விட பலமடங்கு எரிச்சலை தந்து கொண்டிருக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஐஸ்வர்யாவை ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசன் கண்டிக்காமல் இருந்தது மட்டுமின்றி மறைமுக ஆதரவும் கொடுத்து காப்பாற்றி வருவதே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய பின்னடைவு
 
இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ஐஸ்வர்யா இருக்கின்றார் என்ற நிலை ஏற்பட்டவுடன் உடனே யாஷிகாவுக்கு ஒரு சிறப்பு சலுகையை கொடுத்து நாமினேட் செய்யப்பட்ட யாராவது ஒருவரை அவர் காப்பாற்றலாம் என்று கூறுகிறார். அனைவரும் எதிர்பார்த்தபடியே ஐஸ்வர்யா மீண்டும் யாஷிகாவால் காப்பாற்றப்படுகிறார். இப்படி ஒரு மோசடி நிகழ்ச்சியை நடத்துவதைவிட கேவலம் வேறு எதுவும் இல்லை என்றே நெட்டிசன்கள் ஆத்திரப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
 
எது எப்படியோ இந்த பிக்பாஸ் மூலம் புகழ்பெற்று அரசியலில் பெரிய ஆளாகிவிடலாம் என்ற கமல்ஹாசனின் கனவு கானல் நீராகவே மாறிவிட்டது போல்தான் தோன்றுகிறது. கமல்ஹாசனுக்கு ஓரளவு இருந்த புகழும் இந்த நிகழ்ச்சியினால் கெட்டுவிட்டது என்பதே உண்மை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments