Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் பிரச்சனையில் சிக்கிய அச்சம் என்பது மடமையடா

மீண்டும் பிரச்சனையில் சிக்கிய அச்சம் என்பது மடமையடா

மீண்டும் பிரச்சனையில் சிக்கிய அச்சம் என்பது மடமையடா
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (16:43 IST)
சிம்பு பாடல் காட்சியில் நடித்துக் கொடுத்ததைத் தொடர்ந்து, அச்சம் என்பது மடமையடா படத்தை செப்டம்பர் 30 வெளியிட தீவிரமாக வேலை பார்த்து வந்தனர். ஆனால், படத்தை வெளியிட முடியாதபடி ஆந்திராவிலிருந்து பிரச்சனை பிளைட் ஏறி வந்திருக்கிறது.

 
அச்சம் என்பது மடமையடா படத்தை கௌதம் தமிழ், தெலுங்கில் இயக்கியுள்ளார். தமிழில் சிம்பு, தெலுங்கில் நாக சைதன்யா. இரண்டு மொழிகளிலும் ஒரேநாளில் வெளியிட்டால்தான் பாதுகாப்பு. 
 
நாக சைதன்யாவின் பிரேமம் படம் அக்டோபர் 7 வெளியாவதால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் செப்டம்பர் 30 அச்சம் என்பது மடமையடாவின் தெலுங்கு பதிப்பை  வெளியிட எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனால், அக்டோபர் இறுதியில்தான் அச்சம் என்பது மடமையடா திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொலைக்காட்சியையும் விடாத ப்ரியங்கா சோப்ரா