Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணையும் ஹரி – சூர்யா

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (14:59 IST)
‘சிங்கம்’3’யைத் தொடர்ந்து, மறுபடியும் சூர்யாவை வைத்து படம் இயக்கப் போகிறார் ஹரி என்கிறார்கள்.
 
 
சூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’ படங்களை எடுத்தவர் இயக்குநர் ஹரி. அதுவும், ‘சிங்கம்’ மூன்று  பாகங்களைக் கடந்துவிட்டது. நான்காவது பாகமும் வரும் என க்ளூ கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், மறுபடியும் சூர்யாவை வைத்து படம் இயக்கப்போவதாகக் கூறியுள்ளார் ஹரி. ஆனால், இது ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகமாக  இருக்காதாம். புதிய கதையொன்றில் இருவரும் இணைகிறார்களாம். 
 
தற்போது, ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான ஆரம்ப வேலைகளில் இருக்கிறார் ஹரி. இன்னும் மூன்று  மாதங்களில் ஷூட்டிங் போகிறார்கள். இந்தப் படத்தை முடித்தபிறகு சூர்யா படத்தின் வேலைகளைத் தொடங்க இருக்கிறார்  ஹரி. 
 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்துவரும் சூர்யா, அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதன்பிறகு, ஹரி படத்தில் நடிக்கப் போகிறார் சூர்யா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் நிற உடையில் மயக்கும் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி..!

குடித்துவிட்டு மேடையில் மயங்கினேனா?... நடிகர் விஷால் விளக்கம்!

சித்தார்த்& சரத்குமார் நடிக்கும் ‘3BHK’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments