Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய ஜீ.வி.பிரகாஷ்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (11:54 IST)
‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து மறுபடியும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.
விஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘மெர்சல் அரசன் வாரான்’ பாடலைப் பாடியவர் ஜீ.வி.பிரகாஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் பாடலை விவேக் எழுதியிருந்தார். குத்துப் பாடலான இது, எல்லோரையும் கவரும் வகையில் இருந்தது.
 
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் ஒரு பாடலைப் பாடியுள்ளார் ஜீ.வி.பிரகாஷ். இந்த முறை தான் ஹீரோவாக நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’  படத்துக்காகப் பாடியுள்ளார். ராஜிவ் மேனன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி, வினீத், நெடுமுடி வேணு, குமரவேல், டிடி ஆகியோர்  நடித்துள்ளனர்.
 
“சர்வம் தாள மயம் படத்துக்காக இந்தியாவின் மொஸார்ட் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஓப்பனிங் பாடலைப் பாடியுள்ளேன். ‘பீட்டர் பேட்ட எது’ என்று தொடங்கும் இந்தப் பாடல், ‘ஊர்வசி’ பாடலுக்குப் பிறகான செம தரை லோக்கலாக இருக்கும். இளைஞர்களின் ஆந்தமாக இது இருக்கும்” என்று  தெரிவித்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

மீண்டும் ஒரு பீரியட் கதையில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி… வெளியான அறிவிப்பு!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… தயாரிப்பு நிறுவனம் யார் தெரியுமா?

சூர்யாவுக்கு மட்டும் flop கொடுத்தேனா?... இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்!

பிற மொழிப் படங்களை இயக்கும் போது மாற்றுத்திறனாளி போல உணர்கிறேன்… AR முருகதாஸ் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments