Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய ஜீ.வி.பிரகாஷ்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (11:54 IST)
‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து மறுபடியும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.
விஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘மெர்சல் அரசன் வாரான்’ பாடலைப் பாடியவர் ஜீ.வி.பிரகாஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் பாடலை விவேக் எழுதியிருந்தார். குத்துப் பாடலான இது, எல்லோரையும் கவரும் வகையில் இருந்தது.
 
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் ஒரு பாடலைப் பாடியுள்ளார் ஜீ.வி.பிரகாஷ். இந்த முறை தான் ஹீரோவாக நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’  படத்துக்காகப் பாடியுள்ளார். ராஜிவ் மேனன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி, வினீத், நெடுமுடி வேணு, குமரவேல், டிடி ஆகியோர்  நடித்துள்ளனர்.
 
“சர்வம் தாள மயம் படத்துக்காக இந்தியாவின் மொஸார்ட் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஓப்பனிங் பாடலைப் பாடியுள்ளேன். ‘பீட்டர் பேட்ட எது’ என்று தொடங்கும் இந்தப் பாடல், ‘ஊர்வசி’ பாடலுக்குப் பிறகான செம தரை லோக்கலாக இருக்கும். இளைஞர்களின் ஆந்தமாக இது இருக்கும்” என்று  தெரிவித்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments