Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருள் விவகாரம்: ராகினியை அடுத்து சஞ்சனா கல்ராணி கைது!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (10:55 IST)
கன்னட திரையுலகில் போதைப் பொருள் அதிகமாக புழங்குவதாகவும், இதனை அடுத்து கன்னட திரையுலக பிரபலங்கள் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ், கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து போலீசார் 3 நாள் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையில் இந்த இந்த வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சஞ்சனாவிடம் விசாரணை செய்ய சம்மன் அனுப்பப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் சிபிஐ அதிகாரிகள் நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் சோதனை செய்தனர். சோதனைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது சிபிஐ அலுவலகத்தில் சஞ்சனா கல்ராணியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் அவரிடமிருந்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரையும் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments