Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நோட்டா'வை அடுத்து விஜய் தேவரகொண்டாவின் அடுத்த தமிழ்ப்படம்

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2018 (11:22 IST)
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படமான 'நோட்டா' தமிழகத்தில் அதிகாலை காட்சி திரையிடும் அளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். ஸ்ரீகார்த்திக் என்ற புதுமுக இயக்குனர் இயக்கவுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இந்த படமும் ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது.

யோகிபாபு, பிரியதர்ஷி,  ராகுல் ராமகிருஷ்ணா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளது. விஜய் தேவரகொண்டாவின் 'டாக்ஸிவாலா' என்ற தெலுங்கு படம் சென்னை உள்பட தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

அனிருத், சாய் அப்யங்கர் எல்லாம் இருப்பது எனக்கு நன்மைதான்… ஏ ஆர் ரஹ்மான் பதில்!

கிரவுட் பண்ட்டிங்கில் உருவான ‘மனிதர்கள்’ திரைப்படம் மே 30 ஆம் தேதி ரிலீஸ்!

பராசக்தி படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை… இயக்குனர் சுதா கொங்கரா பதில்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் கோலி என்னைத் தெரியாது என்றார்… ஆனால் இப்போ? – சிம்பு பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments