Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பலத்த யோசனைக்குப் பின் வாக்களித்த விஜய்

பலத்த யோசனைக்குப் பின் வாக்களித்த விஜய்

பலத்த யோசனைக்குப் பின் வாக்களித்த விஜய்
, செவ்வாய், 17 மே 2016 (12:17 IST)
2016 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய நேரம் முதல் பல்வேறு நடிகர், நடிகைகளும் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.


 


அஜித், ரஜினி ஆகியோர் காலையிலேயே முதல் ஆளாக வந்து தங்களது வாக்கை பதிவு செய்தார்.
 
மேலும், பல நடிகர், நடிகையரும் தங்களது வாக்கை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்ய சோளிங்கநல்லூர் தொகுதிகுட்பட்ட நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு காலை 10.45 மணிக்கு வருகை தந்தார். அவரை பார்ப்பதற்கும்,  புகைப்படம் எடுப்பதற்கும் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது. 

போலீசார் அவரை பத்திரமாக வாக்குப்பதிவு செய்யும் இடத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் தனது ஆவணங்களை அலுவலர்களிடம் ஒப்படைத்து, தனது வாக்கை பதிவு செய்ய வாக்கு எந்திரத்திற்கு முன் வந்து, சில நிமிடம் யோசித்த அவர் பின்னர், தனது வாக்கை பதிவு செய்தார்.
 
அங்கிருந்து புறப்படும்போதும் விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். பின்னர், அவரை பாதுகாவலர்களும், போலீசாரும் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
 
இதுகுறித்து சமூகவலைதளங்களில், விஜய் அப்படி என்னதான் யோசித்து இருப்பார் என பல்வேறு கருத்துகளை தெரிவித்து உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீரா ஜாக்கிரதை - குற்றம் நடந்தது என்ன?