Webdunia - Bharat's app for daily news and videos

Install App

47 நாட்களுக்குப் பிறகு முதன்முதலில் வெளியாகும் படம் எது எனத் தெரியுமா?

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (11:10 IST)
திரைத்துறையின் 47 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு முதன்முதலில் வெளியாகும் படம் எது எனத் தெரியவந்துள்ளது. 
திரைத்துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்காக கடந்த 47 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது தயாரிப்பாளர்கள் சங்கம். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாளை முதல் படங்கள் ரிலீஸாக உள்ளன.
இதில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மெர்க்குரி’ படம் முதன்முதலில் ரிலீஸாக இருக்கிறது. பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம், சைலண்ட் த்ரில்லராக உருவாகியுள்ளது. ‘மேயாத மான்’ இந்துஜா, தீபக் பரமேஷ், ஷனந்த் ரெட்டி, ஷஷாங்க் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
மற்ற மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான இந்தப் படம், தமிழில் நாளை ரிலீஸாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அஜித்தின் முதல் படத்திற்கு நான் தான் உதவி செய்தேன்: சிரஞ்சீவி பகிர்ந்த தகவல்..!

மகன் விஜய் கட்சி குறித்து முதன்முறையாக மனம் திறந்த எஸ்.ஏ.சி.. என்ன சொன்னார் தெரியுமா?

’கூலி’ படத்தில் நடிக்கிறேன்.. ‘மோடி’ படத்தில் நடிக்கவிலை.. ஆனால்.. சத்யராஜ் பேட்டி..!

பாலஸ்தீன் மக்களை கொன்று குவித்த இஸ்ரேல்..! கண்டித்து பதிவிட்ட த்ரிஷா, சமந்தா!

வித்தியாசமான ஆடையில் ஹன்சிகா நடத்திய ஸ்டன்னிங்கான போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments