Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலரை திடீர் திருமணம் செய்து கொண்ட ராணி முகர்ஜி

காதலரை திடீர் திருமணம் செய்து கொண்ட ராணி முகர்ஜி
, புதன், 23 ஏப்ரல் 2014 (11:09 IST)
நடிகை ராணி முகர்ஜி தனது நீண்ட நாள் காதலர் ஆதித்ய சோப்ராவை திடீரென திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இத்தாலியில் நடந்தது.
ராணி முகர்ஜி - ஆதித்ய சோப்ரா திருமணம் சட்டபூர்வமாக இப்போதுதான் நடக்கிறது. ஆனால் மீடியாக்கள் இவர்களுக்கு பலமுறை திருமணம் செய்து வைத்திருக்கின்றன. அந்தளவுக்கு இவர்களின் காதல் பிரபலம். 
 
ஆதித்ய சோப்ரா மறைந்த இயக்குனர் யாஷ் சோப்ராவின் மகன். யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் இவர்களுடையதுதான். தந்தையைப் போல இயக்கம், தயாரிப்பு இரண்டிலும் கால் பதித்தவர் ஆதித்ய சோப்ரா. ராணி முகர்ஜியுடனான இவரது காதல் பல வருடங்களாகப் பேசப்பட்டு வருகிறது. ஒருகட்டத்தில், இருவரும் ரகசியமாக திருமணம் செய்து குடும்பம் நடத்துகிறார்கள் என்று மும்பை பத்திரிகைகளே எழுதின. 
 
யாஷ் சோப்ராவின் நினைவுநாள் கூட்டத்தில் பேசிய சத்ருகன் சின்கா ராணி முகர்ஜியை ராணி முகர்ஜி சோப்ரா என்றே குறிப்பிட்டார். இவர்களின் நெருக்கத்துக்கு இதைவிட உதாரணம் தேவையில்லை.
 
இந்நிலையில் இருவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திடீர் திருமணம் பாலிவுட்டில் எந்த ஆச்சரிய அலைகளையும் எழுப்பவில்லை. சரிதான்... இப்போதாவது பண்ணிட்டாங்களே என்ற திருப்தியான முணுமுணுப்புதான் எல்லோரிடமும்.
 
மும்பையில் திரையுலகினருக்காக பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil