Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐம்பதுகளில் நடக்கும் கதை - அதர்வா, எஸ்.பி.பி.சரண் நடிக்கின்றனர்

ஐம்பதுகளில் நடக்கும் கதை - அதர்வா, எஸ்.பி.பி.சரண் நடிக்கின்றனர்
, வியாழன், 2 ஜூலை 2015 (15:23 IST)
ஒரு கமர்ஷியல் வெற்றிக்காக காத்திருக்கிறார், அதர்வா. சற்குணத்தின் சண்டி வீரன்தான் அவர் மலையாக நம்பியிருக்கும் படம். அது தவிர கணிதன், ஈட்டி என சில படங்கள் உள்ளன.
அடுத்து ராஜமோகன் இயக்கும் படத்தில் அதர்வா நடிக்கிறார். எஸ்.பி.பி.சரண் தயாரித்த, குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தை இயக்கிய ராஜமோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் இது.
 
படத்தின் கதை 1957 -இல் தொடங்கி இன்றுவரை நடப்பது போல் எழுதப்பட்டுள்ளது. மலையும் மலை சார்ந்த இடங்கள்தான் படப்பிடிப்பு நடக்கப் போகிற இடங்கள். தேனி, கொடைக்கானல் என்று மலைப்பிரதேசமாக லொகேஷன் தேடியிருக்கிறார்கள்.
 
அதர்வா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் எஸ்.பி.பி.சரண் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil