Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதனால்தான் திருமணத்தை நிறுத்தினேன் - நடிகை த்ரிஷா ஓபன் டாக்

இதனால்தான் திருமணத்தை நிறுத்தினேன் - நடிகை த்ரிஷா ஓபன் டாக்

இதனால்தான் திருமணத்தை நிறுத்தினேன் - நடிகை த்ரிஷா ஓபன் டாக்
, ஞாயிறு, 6 நவம்பர் 2016 (08:44 IST)
தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் திருமணத்தை நிறுத்தினேன் என்று நடிகை த்ரிஷா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஒவ்வொரு நடிகையும் ஒரு கால கட்டத்திற்கு பிறகு, அதாவது தனது மார்கெட் டல்லடிக்கும் போது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவது வழக்கமான ஒன்று.
 
த்ரிஷாவுக்கும், தொழில் அதிபர் வருண் மணியணுக்கும், கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக அந்த திருமணம் நின்று போனது.

webdunia

 

 
தற்போது அது குறித்து ஒரு சினிமா பட விழாவில் த்ரிஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த த்ரிஷா “நான் சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். எப்போதும் சினிமாவில் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். திருமணத்திற்கு பிறகு நான் என்னவாக இருக்கப்போகிறேன் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.  எனவே, தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே நான் திருமணத்தை நிறுத்தினேன்.
 
கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் போனால் கூட, எந்த கதாபாத்திரம் என்றாலும் நான் நடிப்பேன்’ என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கத்தி சண்டை - கலக்கல் டிரெய்லர் வீடியோ