Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகார் கொடுத்த நடிகைக்கு மிரட்டல்...விஜய் பாபுவை பிடிக்க போலீஸார் தீவிரம்!

Webdunia
திங்கள், 9 மே 2022 (19:19 IST)
மலையாள சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்பாபு. இவர் மீது ஒரு நடிகை பாலியல் புகார் கூறினார். இதுகுறித்து போலீஸார் விஜய்பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.

அவர் மீது மேலும் சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மலையாள   நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து விஜய்பாபுவை நீக்க பலரும் கூறி வருகின்றனர்.

எனவே கேரள போலீஸார்   நேரில் வந்து ஆஜராகுமாறு விஜய் பாபுவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். மேலும் தான் வெளி நாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால்,  நேரில் வந்து ஆஜராக முடியாது எனவும் 19 ஆம் தேதி வரை தனக்கு அவகாசம்   வேண்டும் என போலீஸாருக்கு மெயில் அனுப்பியுள்ளார் விஜய் பாபு.

இதனை ஏற்க மறுத்துள்ள போலீஸார் சர்வதேச போலீஸாருடன் இணைந்து விஜய் பாபுவை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தன் மீது பாலியல் புகார் கொடுத்த  நடிகைக்கு விஜய் பாபு வாபஸ் பெறும்படி மிரட்டல் விடுத்ததாகவும் இதுகுறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்