Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்த நடிகை டாப்ஸி

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (15:22 IST)
மும்பையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை டாப்ஸிக்கும் ஒரு பத்திரிக்கையாளருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

தற்போது அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகும் டோபாரோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகிறது. இது சம்மந்தமான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை டாப்ஸி கலந்துகொண்டார். அப்போது அவரை புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க சொன்ன பத்திரிக்கையாளர் ஒருவருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.

அப்போது டாப்ஸி “நான் என் வேலையை ஒழுங்காக செய்கிறேன். கேமரா என்னை நோக்கி இருப்பதால் நான் சொல்வது மட்டும் தெரியும். கேமரா உங்கள் பக்கம் திரும்பினால் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதும் தெரியும். நீங்கள் மரியாதையாக பேசினால் நானும் மரியாதையாக பேசுவேன்” என கோபத்தை வெளிப்படுத்தி பேசினார். இந்த சம்பவமானது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல்.. வசூலில் கலக்கும் தனுஷின் ‘குபேரா’!

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படத்துக்கு R சான்றிதழ்தான் கிடைக்குமா?... ரசிகர்கள் அதிர்ச்சி

தக் லைஃப் படத்துக்கு மல்ட்டிப்ளக்ஸ் சங்கத்தினர் அபராதம்… பின்னணி என்ன?

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. மருத்துவமனையில் இருந்து நடிகர் பொன்னம்பலம் உருக்கம்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments