Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை பாலியல் வன்கொடுமை? நடிகர் சங்க பதவியில் இருந்து ராஜினாமா செய்த நடிகர்!

Prasanth Karthick
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (10:02 IST)

மலையாள சினிமா உலகில் நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசு அமைத்த ஹேமா கமிட்டி ஆய்வுகள், விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்த நிலையில், அதில் பல நடிகைகள், துணை நடிகைகள் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஹேமா கமிட்டி அறிக்கை அடிப்படையில் கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள், தவறாக நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார்வதி திருவொத்து, ஊர்வசி உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்து நடிகர் சித்திக் மீதே பாலியல் புகார் எழுந்துள்ளது. ஒரு நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் நடிகர் சித்திக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல்கள் ஒலித்து வரும், நிலையில் சித்திக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னிடம் போலீஸார் எந்த விசாரணையும் நடத்தவில்லை… இயக்குனர் நெல்சன் தரப்பு விளக்கம்!

கோட் படத்தில் கேப்டன் காட்சிகள் பிரம்மாண்டமா வந்துருக்குன்னு விஜய் சொன்னார் – பிரேமலதா பேட்டி!

மெகாலி மீனாட்சி விட்டல் ராவ் நடித்துள்ள"இறுதி முயற்சி" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது....

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோ ஆல்பம்!

சமந்தாவின் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்