Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளத்துக்காக கெஞ்சக் கூடாது… பாரபட்சம் குறித்து சமந்தா!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (08:44 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் இப்போது காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்க உள்ளார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படம் நவம்பர் மாதமே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் இப்போது ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் சமந்தா ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில் சினிமாவில் சம்பளம் பாரபட்சமாக வழங்கப்படுவது குறித்து பேசியுள்ளார். அதில் “சம்பளத்துக்காக கெஞ்சக் கூடாது.  தயாரிப்பாளர்கள் தாங்களாகவே முன் வந்து அதைக் கொடுக்க வேண்டும். தீவிர உழைப்புக்குப் பலன் கிடைக்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments