Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவருக்காவது உணவு கொடுங்கள்: நடிகை வேண்டுகோள்

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (21:58 IST)
இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு ஒருவருக்காவது உணவு கொடுங்கள் என நடிகை ராஷிகண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
இன்றைக்கு லட்சக்கணக்கான மக்கள் உயிர் வாழத் தேவைப்படும் உணவு இன்றி உள்ளனர். இந்த பெரும் தொற்றால் பசியின் கொடுமை அதிகரித்துவிட்டது. வாழ்வாதார பற்றாக்குறையால் வருமானம் குறைந்து போனதாலும் அடிப்படை தேவையான உணவுக்கு வழியில்லாமல் போய்விட்டது
 
இந்தப் பெரும் தொற்றின் தொடரின் இரண்டாம் அலை பல ஏழைக் குடும்பங்களை பட்டினியில் தள்ளிவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாக அனைவருக்கும் பணப்பற்றாக்குறை. நான் தனிப்பட்ட முறையில் ரொட்டி வங்கியுடன் இணைந்து வேலை பார்த்து வருகிறேன். இந்த நேரத்தில் பசியால் தவிக்கும் மக்களுக்கு ரொட்டி வங்கியினர் இடைவிடாமல் சாப்பாடு கொடுத்து வருகிறார்கள். இப்பொழுது நீங்களும் உதவ வேண்டிய நேரம் இது. உங்களால் 100 பேருக்கு உணவளிக்க முடியாவிட்டாலும் ஒருவருக்காவது உணவளிக்கலாம்’ என்று கூறியுள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments