Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை ரம்பா குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல்!!

நடிகை ரம்பா குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல்!!
, புதன், 26 அக்டோபர் 2016 (11:06 IST)
கோலிவுட்டில் விவாகரத்து சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் நடிகை ரம்பா தன்னை தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நீதிமன்றம் சென்றுள்ளார்.

 
நடிகை அமலா பால் விஜய், ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்து வாழ்கிறார். இப்படி அடுத்தடுத்து விவாகரத்து சம்பவங்கள் நடக்கும் நிலையில் நடிகை ரம்பாவின் வழக்கு வித்தியாசமாக அமைந்துள்ளது.
 
ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரன் பத்மநாதனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். இந்நிலையில் இந்து திருமணச் சட்டம் பிரிவு 9-ன் படி தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தன்னை அவருடன் சேர்த்து வைக்குமாறும் கூறி ரம்பா சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
2 பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு தனியாக வாழ முடியாது என்றும், கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் ரம்பா தனது மனுவில் தெரிவித்துள்ளார். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடதக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்துக்காக ஐதராபாத் ஐரோப்பாவாக மாற்றம்