Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை பார்வதியைப் பின் தொடர்ந்து தொல்லைக் கொடுத்த இளைஞர் – போலிஸில் புகார் !

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (15:08 IST)
மலையாள நடிகை பார்வதியைப் பற்றி அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் உண்மைக்குப் புறம்பான தகவலைப் பரப்பிய நபர் மேல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடிகை பார்வதியின் அண்ணனுக்கு ஒரு குறுஞ்செய்தியில் தன்னை வழக்கறிஞர் என அறிமுகப்படுத்திக்கொண்ட கிஷோர் என்பவர், பார்வதி சில மாஃபியா கும்பலிடம் சிக்கி இருப்பதாகவும்  அவரை மீட்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

தொடர்ந்து பார்வதியைப் பற்றி தவறான செய்திகளை அவர் அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் அவரின் உளறல்களைக் கேட்டு கடுப்பான அவர் கிஷோரின் எண்ணை பிளாக் செய்துள்ளார். அதன் பின்னர் கிஷோரின் மெசேஜ்கள் பர்வதியின் தந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன. அதன் பின்னர் பார்வதியின் வீட்டருகே குடியிருப்பவர்களிடம் பார்வதி பல ஆண்களிடம் பேசிகொண்டு இருப்பதாகவும் அதில் ஒருவர் தனது நண்பர் எனவும் சொல்லியுள்ளார். இதையடுத்து பார்வதி கேரள போலிஸாரிடம் அவர் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்க்ரின் ஷாட்களை ஆதாரங்களாக சமர்ப்பித்து புகார் கொடுத்துள்ளார். போலீஸார் இந்தியத் தண்டனைச் சட்டம் 354 டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments