Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் போரில் சிக்கிக் கொண்ட இந்திய நடிகை! – பாலிவுட்டில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (11:03 IST)
இஸ்ரேலில் போர் வெடித்துள்ள நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் இஸ்ரேலில் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய தீவிரவாத அமைப்பான ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் கடத்திக் கொண்டு தங்கள் ஆக்கிரமிப்பு பகுதியான காசா பகுதிக்குள் சென்று விட்டனர். இதனால் அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ள இஸ்ரேல் ஹமாஸ் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் போர் நடந்து வரும் இஸ்ரேலில் பிரபல இந்தி நடிகை நுஸ்ரத் பாருச்சா சிக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியில் பல படங்களில் நடித்துள்ள அவர் இஸ்ரேலில் நடைபெற்ற ஹய்ஃபா சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார். கடைசியாக அவரிடம் நேற்று மதியம் 12.30 மணி அளவில் பேசியதாக கூறப்படும் நிலையில், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நுஸ்ரத் பாருச்சா பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏன் இயக்குனர்கள் சுமார் படங்களையும் பார்க்கவேண்டும்?… தக் லைஃப் தோல்வியால் எழுந்த புரிதல்!

குழந்தைக் கடத்தல்… அதன் பின்னர் நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்… ஓடிடி ஹிட் ‘ஸ்டோலன்’ எப்படி இருக்கு?

சூர்யா 45 படத்தின் அப்டேட் கொடுத்த சாய் அப்யங்கர்!

இன்று வெளியாகிறது தனுஷின் ‘குபேரா’ டிரைலர்!

நடிகனாக இருப்பது சலிப்பாக உள்ளது… இயக்குனர் மிஷ்கின் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments