Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“முதல் முறையாக நான் பொறாமைப் படுகிறேன்…” பொன்னியின் செல்வன் குறித்து மீனா பதிவு!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (08:05 IST)
நடிகை மீனா பொன்னியின் செல்வன் திரைப்படத்தினைப் பற்றி பதிவிட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயைப் பார்த்து தான் பொறாமைப்படுவதாக நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “இனிமேலும் என்னால் உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது. வாழ்க்கையில் முதல் முறையாக நான் ஒருவரைப் பார்த்து பொறாமைப் படுகிறேன். அது ஐஸ்வர்யா ராய். ஏனென்றால் என்னுடைய கனவு பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் விருது அறிவிப்பு!

ஐபிஎல் போட்டிகளை விட அதிக TRP… புஷ்பா 2 படம் படைத்த சாதனை!

மீண்டும் நடந்த ரஜினி & ஹெச் வினோத் சந்திப்பு…உறுதியாகிறதா கூட்டணி?

மகேஷ் பாபு படத்துக்காக 50 கோடி ரூபாயில் செட்… வாரணாசியை ரி க்ரியேட் செய்யும் ராஜமௌலி!

எனக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்லி ஓரம்கட்டினார்கள்… மலையாள சினிமா குறித்து அனுபமா வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments