Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகை டிஸ்கோ சாந்தி சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகை டிஸ்கோ சாந்தி சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி
, புதன், 19 நவம்பர் 2014 (14:05 IST)
நடிகை டிஸ்கோ சாந்தி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
மறைந்த நடிகர் சி.எல். ஆனந்தனின் மகளான டிஸ்கோ சாந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
 
100க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களுக்கும் நடனமாடியுள்ள டிஸ்கோ சாந்தி கடந்த 1996 ஆம் ஆண்டு, தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 
திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஐதராபாத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் டிஸ்கோ சாந்தியின் கணவர் ஸ்ரீஹரி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
 
கணவர் இறந்த பிறகு டிஸ்கோ சாந்தியின் உடல் நிலையும் மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவரு கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
 
இந்நிலையில் டிஸ்கோ சாந்தியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அங்கு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு வருகிறது. 90 ஆம் ஆண்டுகளில் கவர்ச்சி நடிப்பில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டவர் டிஸ்கோ சாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil