Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை புவனேஸ்வரியின் வீடு, நிலம் அபகரிப்பு

நடிகை புவனேஸ்வரியின் வீடு, நிலம் அபகரிப்பு
, திங்கள், 20 ஏப்ரல் 2015 (12:49 IST)
நடிகை புவனேஸ்வரி தனது வீடு, நிலம் அபரிக்கப்பட்டதாக கோவை அன்னூர் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். அந்த புகாரின் விவரம் வருமாறு.
 
எனக்கு சொந்தமாக கோவை அன்னூரில் வீடு மற்றும் தியேட்டர் 64 சென்ட் இடத்தில் உள்ளது. கடந்த 2012–ம் ஆண்டு இந்த வீடு, தியேட்டரை அன்னூரை சேர்ந்த தொழில் அதிபர் சுப்பிரமணியன் என்பவருக்கு விற்க முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தை நடந்தது.
 
இந்த நிலையில் சுப்பிரமணியன் போலி ஆவணங்கள் தயாரித்து அன்னூர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து எனது வீடு மற்றும் தியேட்டரை அபகரித்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும். 
 
புவனேஸ்வரியின் புகாரைத் தொடர்ந்து, சுப்பிரமணி மீது 4 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil