Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜாதி அவசியம்: சைத்தான் நாயகி பேட்டி!!

ஜாதி அவசியம்: சைத்தான் நாயகி பேட்டி!!
, வெள்ளி, 16 டிசம்பர் 2016 (16:56 IST)
தமிழ் சினிமாவில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள ஜாதி பெயரை சேர்த்துள்ளேன் என கூறி இருக்கிறார் நடிகை அருந்ததி நாயர்.


 
 
மலையாள நடிகைகள் பார்வதி, ஜனனி உள்ளிட்ட சிலர் தங்கள் பெயருக்கு பின்னால் உள்ள ஜாதி பெயர்களை போடுவதில்லை. ஆனால், நடிகை அருந்ததி பெயருக்கு பின்னால் நாயர் என ஏன் வைத்துள்ளார் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
 
கேரளாவில் பெயருக்கு முன்னால் ஊர் பெயரையும், பெயருக்கு பின்னால் ஜாதி பெயரையும் வைத்துக் கொள்வது வழக்கம். இதனை கேரளாவில் ஜாதி அடையாளமாக பார்க்க மாட்டார்கள் குடும்ப அடையாளமாகத்தான் பார்ப்பார்கள். 
 
மேலும், கேரளாவில் என்னை தவிர அருந்ததி என்கிற பெயரில் வேறு சில நடிகைகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள். எனவே என்னை தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்திக் கொள்ளத்தான் நாயர் அடைமொழியை சேர்த்திருக்கிறேன். இது எனக்கு அவசியமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கலுக்கு விஜயின் பைரவாவோடு மோத வரும் புரூஸ் லீ!!