Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரும் பயப்படவேண்டாம்… நான் நலமுடன் திரும்பி வருவேன் –சிவராஜ்குமார் நம்பிக்கை!

vinoth
வெள்ளி, 20 டிசம்பர் 2024 (11:46 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனார். அதன் பின்னர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அத்ற்காக சிகிச்சை எடுக்க அமெரிக்கா சென்றுள்லார். அமெரிக்காவின் ப்ளோரிடாவில் பேசிய சிவராஜ் குமார் தான் நலமுடன் திரும்பி வருவேன் என்று நம்பிக்கையாகப் பேசியுள்ளார்.

அதில் “புற்றுநோய் என்றதும் என்னை சுற்றியுள்ளவர்களும் நானும் கொஞ்சம் பயந்துவிட்டோம். ஆனால் சோதனைகள் செய்து பார்த்ததில் பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்று தெரியவந்தது. மியாமி கேன்சர் இன்ஸ்டியூட்டில் எனக்கு அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது. சிகிச்சை முடிந்து நான் ஒரு மாதத்தில் இந்தியா திரும்புவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்கும் சூர்யா… செம்ம சர்ப்ரைஸ் காத்திருக்கு!

‘கமல் சார் 58 நிமிடம் பேசுவார்.. நான் 2 நிமிடம் பேசுவேன்’ – நக்கல்யா மணிரத்னத்துக்கு!

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் எப்பதான் ரிலீஸ் ஆகும்?,.. பணிகளை முடுக்கிவிடும் படக்குழு!

மணிரத்னம், கமல்ஹாசன் 2 பேருமே சீனியர்கள்.. இளைய தலைமுறை ரசிகர்களை ஈர்க்குமா ‘தக்லைஃப்’?

தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது… தக் லைஃப் ப்ரமோஷனில் கமல் பேச்சு – கர்நாடகாவில் எழுந்த எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments