‘ரெமோ’ பட விழாவில் உணர்ச்சிவசப்பட்டு அழுத சிவகார்த்திகேயன் : வீடியோ
‘ரெமோ’ பட விழாவில் உணர்ச்சிவசப்பட்டு அழுத சிவகார்த்திகேயன் : வீடியோ
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ரெமோ திரைப்படம், வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வெற்றியைக் கொண்டாட விழா நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிருத், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்குகேர்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் சிவகார்த்திகேயன்.
இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவை பற்றி பேசும் போது அழுதுவிட்டார். ரெமோ திரைப்படம் வெளியாக பெரிதும் போராடியதாகவும், பலரும் படம் வெளிவர விடாமல் தொல்லைகள் கொடுத்ததாகவும் கண்ணீர் மல்க கூறினார்.
தன்னை வேலை செய்ய விடுமாறு வேண்டுகோள் விடுத்ததோடு, நான் எல்லா மேடையிலும் அழுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் உண்மையாக இருக்கிறேன். ஒவ்வொரு வெற்றிக்கும் போராடுகிறேன். யார் ஹிட்டையும் திருடி வரவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...