தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் அடுத்து இயக்கும் படத்தில் காமெடி நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
செல்வராகவன் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கி வருகிறார். எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் அப்படம் முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் அவர் அடுத்து இயக்கும் படத்தில் காமெடி ஹீரோ சந்தானம் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இதை சந்தானமே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
காமெடி நடிகர் என்பதிலிருந்து கதாநாயகனாக உயர்ந்து கொண்டிருக்கிறார் சந்தானம். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு திட்டு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் செல்வராகவன் படத்தில் நடிக்கவுள்ளார்.