Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலைவனத்தில் மாட்டிக் கொண்டுள்ள நடிகர் – இந்திய அதிகாரிகளுக்கு கடிதம் !

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (08:57 IST)
ஆடுஜீவிதம் எனும் படத்தின் படப்பிடிப்புக்காக ஜோர்டான் நாட்டுக்கு சென்ற நடிகர் பிருத்விராஜ் கொரோனாவால் அங்கேயே முடங்கியுள்ளார்.

மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் ஆடுஜீவிதம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வெளிநாடுகளுக்கு சென்று மாட்டிக்கொள்ளும் இந்தியர்களின் வாழ்வைப் பற்றியது. இந்த படத்துக்காக 58 பேர் கொண்ட குழுவினரோடு ஜோர்டான் நாட்டில் உள்ள ஒரு பாலைவனத்தில் முகாமிட்டு இருந்தனர் படக்குழுழ்வினர்.

அப்போது கொரோனா பரவல் உச்சத்தை தொட்டதால் விமானங்கள் முடக்கப்பட்டதால் படக்குழுவினர் அனைவரும் அந்த நாட்டில் இருந்து இந்தியா திரும்ப முடியாத சூழலுக்கு ஆளானார்கள். இந்நிலையில் தங்களின் நிலைப்பற்றி நடிகர் பிருத்விராஜ் தனது சமூகவலைதளத்தில் ‘எங்கள் குழுவில் ஒரு மருத்துவர் இருக்கிறார். அவர் 3 நாட்களுக்கு ஒருமுறை எங்களை பரிசோதிக்கிறார்.

அதே போல ஜோர்டான் அரசின் மருத்துவரும் எங்களை அடிக்கடி பரிசோதிக்கின்றார். எங்கள் 58 பேரை மீட்பது தற்போது இந்திய அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக இருக்காது எனப் புரிந்து கொள்கிறோம். ஏனென்றால் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பக் காத்திருக்கின்றனர். அதனால் எங்களுக்கான நேரம் வரும்போது எங்களை மீட்டு உதவி செய்யவேண்டும்.’ என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments