சலார் படத்துக்காக ஐந்து மொழிகளிலும் டப்பிங் பேசிய மகிழ்ச்சியில் பிருத்விராஜ்!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (07:15 IST)
பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸானது. 5 மொழிகளில் வெளியான இந்த டிரைலர் மொத்தம் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இரண்டு நண்பர்கள் எப்படி எதிரிக்ள் ஆனார்கள் என்பதை சொல்லும் கதைக்களமாக முதல் பாகம் இருக்கும் என இயக்குனர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் வரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிருத்விராஜ் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளிலும் அவரது கதாபாத்திரத்துக்கு அவரே டப்பிங் பேசியுள்ளதாக தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments