Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட நாட்களுக்கு பிறகு செல்வராகவனை சந்தித்த நிதீஷ் வீரா… நெகிழ்ச்சியான தருணம்!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (16:35 IST)
சமீபத்தில் தமிழ் நடிகர் நீதிஷ் வீரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்.

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவருக்கு சினிமாவில் முதல் முதலாக அடையாளம் தந்தது புதுப்பேட்டையில் அவர் நடித்த மணி கதாபாத்திரம்தான். ஆனால் அந்த படத்துக்கு பிறகு பெரிதாக வாய்ப்புகள் இல்லாத போது இயக்குனர் செல்வராகவனை சந்திக்க பலதடவை முயற்சி செய்தும் அவரால் சந்திக்க முடியவில்லையாம்.

சமீபத்தில் நடிகராகியுள்ள செல்வராகவனின் சாணிக்காயிதம் திரைப்படத்தில் நிதிஷ் வீராவும் நடித்துள்ளார். அப்போது செல்வராகவன் அவரை நலம் விசாரிக்க, நடந்ததைக் கூறியுள்ளார். அதன் பின்னர் செல்வராகவன் தனது அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பணியாற்றலாம் என நிதிஷுக்கு நம்பிக்கைக் கொடுத்துள்ளார். ஆனால் அது நிறைவேறுவதற்குள் நிதீஷ் இறந்துவிட்டார் என்று அவரது நண்பர்கள் இந்த தகவலை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

Source வலைப்பேச்சு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம் படத்திலிருந்து விலகிய மடோன் அஸ்வின்: ராம்குமார் பாலகிருஷ்ணன் இணைகிறாரா?

ரிலீஸ் ஆக முடியாமல் திணறும் வெற்றிமாறனின் 2 படங்கள்.. ரூ.20 கோடி முடக்கமா?

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படம் டிராப்பா? இருவரும் சேர்ந்து எடுத்த அதிரடி முடிவு..!

திரையரங்குகளில் பெங்காலி திரைப்படங்களுக்கே முன்னுரிமை: மம்தா அறிவிப்பால் பாலிவுட் அதிர்ச்சி..!

ஹெல்மெட் அணிந்து சென்ற பெண்களுக்கு ‘கூலி’ படத்தின் 4 டிக்கெட்டுக்கள்.. இன்ப அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments