விஜய்சேதுபதி,எஸ்.ஜே.சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான படம் இறைவி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுவருகிறது. அந்த படத்தில் இடம்பெற்ற தயாரிப்பாளர் வேடம் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. பல தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்புராஜ் மீது நட்வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் படத்தை தயாரிப்பவராக விஜய் முருகன் நடித்துள்ளார். ஆனால் இந்த வேடத்தில் நடிக்க முதலில் நடிகர் மோகனை அணுகினாராம் கார்த்திக் சுப்புராஜ். வில்லன் வேடம் என்பதால் அதனை ஏற்க மறுத்தாராம் மோகன். இதன்பின்னரே அந்த வேடத்திற்கு விஜய் முருகன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.