Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி

Webdunia
சனி, 9 மே 2015 (15:12 IST)
நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் மகன் சதீஷ் (44). மேற்கு மாம்பலம் கோல்டன் காலனியில் வசித்து வந்தார். மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். 
 
எம்.ஆர்.ஆர்.ராதாவின் நடிப்பில் வெளியான ரத்தக்கண்ணீர் படத்தின் 2–ம் பாகத்தை சினிமாவாக தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். நேற்று மாலை 4 மணி அளவில் சதீஷ், நண்பர்கள் சரவணன், பாலு ஆகியோருடன் வெளியில் சென்றார். 
 
குன்றத்தூர், பூந்தண்டலம் கிருஷ்ணா நகரில் உள்ள பங்களாவுக்கு படப்பிடிப்புக்கான இடத்தை பார்வையிட சென்றார். மாலை 4 மணி அளவில் அங்கிருந்த நீச்சல் குளத்தில் இறங்கி குளித்தார். மாலை 6 மணி வரை நீண்ட நேரமாக குளித்துக்கொண்டே இருந்தார். 
 
அப்போது சதீசுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் சதீஷை காப்பாற்றி நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிசிச்சைக்காக மாங்காட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சதீஷின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். 
 
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சதீஷ் நேற்று இரவு 8 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments