Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு நடிகர் கருணாஸ் ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிப்பு

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு நடிகர் கருணாஸ் ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிப்பு

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு நடிகர் கருணாஸ் ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிப்பு
, சனி, 10 செப்டம்பர் 2016 (16:11 IST)
ரியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 
 
பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் 1.89 மீ. உயரத்தை தாண்டி மாரியப்பன் வென்ற தக்கப் பதக்கமே ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
 
தங்கம் வென்ற மாரியப்பனுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிசு அறிவித்துள்ளது. தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு 2 கோடியை பரிசு தொகையாக அறிவித்துள்ளது.
 
இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற 3-வது இந்தியர் என்ற பெருமையை மாரியப்பன் பெற்றார். தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்து வரும் நிலையில் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தனது பங்களிப்பாக ரூ.50 ஆயிரம் பரிசு அறிவித்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் கமலை பின்பற்றும் சிவகார்த்திகேயன்!