பருத்தி வீரன் மாதிரி கொம்பனும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கார்த்தி கூறினார்.
நடிகர் சிவகுமாரின் உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்தம் கோபியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அதில் நடிகர் சிவகுமார், அவரது மகன் நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கார்த்தி கோபிக்கு வந்திருக்கிறார் என்று அறிந்ததும் உள்ளூர் நிருபர்கள் திருமண மண்டபத்தில் திரண்டனர். அவர்களின் கேள்விகளுக்கு கார்த்தி பதிலளித்தார். கொம்பன் படம் குறித்து கேட்டதற்கு,
"8 ஆண்டுகளுக்கு முன்பு பருத்திவீரன் படம் வெளியானது. அந்த படத்தை போன்று கொம்பன் படமும் மாபெரும் வெற்றி பெறும்" என்றார். வரும் ஏப்ரல் 2 கொம்பன் திரைக்கு வருகிறது.