Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நானும் தமிழன் தான் - மெரினா களத்தில் இறங்கிய கார்த்தி!!

நானும் தமிழன் தான் - மெரினா களத்தில் இறங்கிய கார்த்தி!!
, சனி, 21 ஜனவரி 2017 (12:59 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று ஐந்தாவது நாளாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு இரவு, பகலாக போராட்டம் நடத்திவருகின்றனர்.


 
 
பேரெழுச்சியுடன் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் நடிகர் விஜய் இன்று அதிகாலை மெரினா கடற்கரையில் போரட்டத்தில் கலந்து கொண்டார். 
 
அவரைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியும் இன்று காலை நேரில் சென்று போரட்டத்தில் பங்கேற்று வருகிறார். முகத்தில் கர்சீப் கட்டியபடி, போராட்டக்களத்தில் கார்த்தி அமர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் பரவி வருகின்றது.
 
நடிகர் கார்த்தி நேற்று நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்திலும் பங்கெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல், ரஜினி கலந்து கொண்ட திரைத்துறையினரின் மௌனப் போராட்டம்