Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணதாசனின் மகனை அலைக்கழிக்கும் லைகா ! அதிர்ச்சி புகார்!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (15:34 IST)
கண்ணதாசனின் மகனான கோபி கண்ணதாசன் லைகா நிறுவனம் தான் கத்தி படத்தில் நடித்ததற்கான சம்பளத்தை இன்னும் தரவில்லை என்று கூறியுள்ளார்.

பிரபல பாடலாசிரியர் கண்ணதாசனின் மகன்களில் ஒருவரான கோபி கண்ணதாசன் கத்தி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் அவர் நீதிபதி வேடத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இப்போது 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவருக்கு பேசப்பட்ட சம்பளத்தில் ஒரு பகுதி தரப்படவில்லையாம்.

இதுகுறித்து லைகா நிறுவனத்துக்கு புகாரளித்த நிலையில் அவர்கள் முழு சம்பளமும் கொடுத்துவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க கமிட் செய்த நிலையில் படப்பிடிப்பை முடிக்காமலும் மற்ற படங்களில் நடிக்க கமிட் ஆக விடாமலும் சூழ்ச்சி செய்வதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சங்கமித்ரா படம் எப்போது தொடங்கும்?... இயக்குனர் சுந்தர் சி தகவல்!

ரோட்டில் போகும் நாயை காப்பாற்றுங்கள், ஆனால் மனிதனை காப்பாற்றாதீர்கள்.. அமீர்-பாவனி குறித்து பிரபலம்..!

’ரெட்ரோ’ இசை விழாவில் ஜோதிகா வராதது ஏன்? மாமனார் - மருமகள் சண்டையா?

சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து! - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா ப்ரதீப் & விக்னேஷ் சிவன் கூட்டணியின் LIK?

அடுத்த கட்டுரையில்
Show comments