Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் மனைவியை சிலர் தூண்டி விடுகிறார்கள் - தாடி பாலாஜி விளக்கம்

என் மனைவியை சிலர் தூண்டி விடுகிறார்கள் - தாடி பாலாஜி விளக்கம்
, புதன், 24 மே 2017 (13:29 IST)
தன்னை ஜாதி பெயர் சொல்லி திட்டுகிறார் என நடிகர் பாலாஜி மீது, அவரின் மனைவி நித்யா காவல் நிலையத்தில் புகார அளித்திருந்தார்.


 

 
ஆனால், இதற்கு பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் ஒரு பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதவது:
 
நானும் எனது மனைவி நித்யாவும் நாங்கள் இருவரும் வெவ்வேறு ஜாதி என தெரிந்து கொண்டுதான் காதலித்துதான் திருமனம் செய்து கொண்டேன். எனக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகிறது. தற்போது திடீரென நான் ஏன் ஜாதி பற்றி பேசப்போகிறேன்?.
 
குடும்பத்தில் நடக்கும் சிறு பிரச்சனையை ஊதி பெரிதாக்கி, அவர் தன் வசதிக்காக ஜாதி பெயர் சொல்லி திட்டியதாக புகார் அளித்துள்ளார். அவரை அவரின் குடும்பத்தினர் தப்பாக வழி நடத்துகிறார்கள். இது நம் குடும்ப பிரச்சனை. வா நாம் அமர்ந்து பேசுவோம் என கெஞ்சிப் பார்த்தேன். ஆனால், அவர் ஏற்கவில்லை. 
 
நடந்தது நடந்து விட்டது. இப்போதும் அவர் மீது எனக்கு கோபம் இல்லை. அவருக்கும் என் மீது பிரியம் இருக்கிறது. கடவுள் எங்களை சேர்த்து வைப்பார். விரைவில் நாங்கள் இணைந்து வாழ்வோம்” என அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைதாவாரா நடிகர் சூர்யா?: தப்பிக்க வழி இருக்கிறதா?