Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம், கௌதம் படங்களில் நடிக்க ஆசை

Webdunia
திங்கள், 4 மே 2015 (09:59 IST)
மணிரத்னம் படத்தில் த்ரிஷா, சூர்யா நடித்திருக்கிறார்கள். விக்ரம், ப்ரியாமணிகூட நடித்துள்ளனர். பிருத்விராஜ், கௌதம் கார்த்திக் என பட்டியல் நீள்கிறது.
 
இவர்களுக்கு எல்லாம் ஓர் ஒற்றுமை, மணிரத்னம் படம் காரணமாக இவர்களின் புகழ் அரை அங்குலம்கூட உயர்ந்ததில்லை. என்றாலும், மணிரத்னம் படத்தில் ஒருமுறையாவது நடிக்கணும் என்ற பெருமூச்சு அடிக்கடி கேட்கவே செய்கிறது. 
 
ஓ காதல் கண்மணி படம் பார்த்த அதர்வா, மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட்டார். அதர்வாவின் தந்தை முரளி மணிரத்னத்தின் படத்தில் நடித்திருக்கிறார். மகன் அசைப்படுவதில் தவறில்லை.
 
அதர்வாவின் மணிரத்னம் ஆசையை புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம், என்னை அறிந்தால் படம் பார்த்தபின் கௌதம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டிருக்கிறதாம். விபரீதமாகதான் தெரிகிறது. அஜீத்தைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் என்னை அறிந்தால் மண்ணை கவ்வியிருக்கும். 
 
அதர்வா ஏன் இப்படியொரு ஆசை?

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments