Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவசரமாக கூட்டப்பட்ட நடிகர் சங்க செயற்குழு

அவசரமாக கூட்டப்பட்ட நடிகர் சங்க செயற்குழு
, வியாழன், 5 நவம்பர் 2015 (11:02 IST)
நாசர் தலைமையிலான நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்றபின் கடந்த 25 ஆம் தேதி செயற்குழு கூட்டப்பட்டது.


 

 
அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நடிகர் கமல், நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் நடிகர் சங்க செயற்குழு அவசரமாக கூட்டப்பட்டது. 
 
தி.நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்த இந்த கூட்டத்துக்கு நாசர் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் வரவு செலவு கணக்கு விவரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. நடிகர் சூர்யா ஏற்கனவே சங்கத்துக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார்.
 
அந்த தொகையை வைத்து தென்னிந்திய நடிகர் சங்கம் பெயரில் புதிய வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது பின்னர் நடிகர் சங்கத்தின் புதிய அறங்காவலர்களாக எஸ்.வி.சேகர், ராஜேஷ், ஐசரி கணேஷ், பூச்சி முருகன், குட்டி பத்மினி ஆகிய மேலும் 5 பேரை நியமனம் செய்து செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. 
 
இவர்களையும் சேர்த்து நடிகர் சங்க அறக்கட்டளைக்கு மொத்தம் 9 பேர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 
 
இவர்களையும் சேர்த்து அறங்காவலர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil