Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல், போலீஸ் பாதுகாப்பு

நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல், போலீஸ் பாதுகாப்பு
, திங்கள், 12 அக்டோபர் 2015 (09:16 IST)
எந்தமுறையும் இல்லாத அளவுக்கு நடிகர் சங்கத் தேர்தல் இந்தமுறை வன்முறையின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.


 

 
பரஸ்பர குற்றச்சாட்டுகள், அவதூறு வழக்குகள் போதாது என்று கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
 
தற்போது பொறுப்பில் இருக்கும் சரத்குமார் அணியை எதிர்த்து விஷால் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிடுகிறது. அவர்களை எப்படியும் போட்டியிலிருந்து விலகச் செய்ய முயற்சிகள் நடந்தன. 
 
இந்நிலையில், நடிகர் விஷாலுக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் டி.பிளாக்கில் வசித்து வரும் விஷால் இதுபற்றி அண்ணாநகர் போலீசில் தனது மானேஜர் மூலமாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
 
அதில், நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் எனக்கு தேவையில்லாத எண்களில் இருந்து போன் செய்து பேசும் சிலர் மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே எனது வீட்டுக்கும்; அலுவலகத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 
இந்த புகாரைத் தொடர்ந்து விஷாலின் வீடு மற்றும் அலுவலகங்களைச் சுற்றி போலீஸnர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எந்தெந்த எண்களில் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil