Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷங்கர் படத்தில் ரஜினியை விட அக்‌ஷய்குமாருக்கு அதிக சம்பளம்?

ஷங்கர் படத்தில் ரஜினியை விட அக்‌ஷய்குமாருக்கு அதிக சம்பளம்?
, திங்கள், 13 ஜூன் 2016 (14:46 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடித்து, இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு ரஜினியை விட அதிக சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தின் அடுத்த பாகமாக உருவாகி வரும் படம் 2.0. இதில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வில்லனாக நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. அதன்பின் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்கு அக்‌ஷய்குமாருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம், ரஜினிக்கும் கொடுக்கும் தொகையை விட அதிகம் என்று செய்தி வெளியாகியிருக்கிறது.
 
பாலிவுட் படங்களில் நடிக்க பல கோடி சம்பளம் பெறுவபர் அக்‌ஷய். தமிழில் நடிக்க அவருக்கு ஏன் அதிக சம்பளம் பேசப்பட்டதற்கு சில காரணங்கள் இருக்கிறது. முதலில் வில்லன் ரோலில் நடிக்க பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான் மற்றும் ஹிரிதிக் ரோசன் ஆகியோரிடம் கேட்கப்பட்டது. அவர்கள் நீண்ட நாட்களாக சம்மதம் தெரிவிக்கவில்லை. 
 
ஆனால் படப்பிடிப்பை உடனடியாக தொடங்க வேண்டிய சூழ்நிலை. எனவே அக்‌ஷய்குமார் கேட்ட அதிக சம்பளத்திற்கு படக்குழு சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரைகுறை ஆடையில் நடிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டேன்: நடிகை ஆனந்தி