Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திரும்பி வந்தார் விருமாண்டி அபிராமி

திரும்பி வந்தார் விருமாண்டி அபிராமி
, வியாழன், 26 ஜூன் 2014 (11:22 IST)
விருமாண்டி படத்தில் நடித்த அபிராமி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரின் முதல் படம் மலையாளத்தில் வெளியாகிறது.
குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமாகி நாயகியானவர் அபிராமி. சின்ன வயதிலிருந்தே கமலின் தீவிர ரசிகை. குணா படத்தில் கமல் அபிராமி அபிராமி என காதல் கொண்டு அலைந்ததை பார்த்து தனது திவ்யா என்ற பெயரை அபிராமியாக மாற்றிக் கொண்டார். இந்த தீவிரம்தான் விருமாண்டியில் கமல் ஜோ‌டியாக நடிக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்தது.
webdunia
விருமாண்டிக்குப் பிறகு அபிராமிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலானார். சில வருடங்களுக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார். நாயகியாகும் முன் மலையாள ஏசியாநெட் தொலைக்காட்சியில் அபிராமி காம்பியராக பணிபுரிந்துள்ளார்.
 

விஸ்வரூபம் படம் எடுத்த போது அபிராமி குறித்து விசாரித்துள்ளார் கமல். அமெரிக்காவில் இருந்த அபிராமியை தொடர்பு கொண்டு விஸ்வரூபத்தில் பூஜா குமாருக்கு அவரை டப்பிங் பேச வைத்தார்.
webdunia

அப்படி மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்தவர் மலையாளத்தில் தயாராகி வரும் அபோதகரே படத்தில் சுரேஷ் கோபியுடன் நடித்து வருகிறார். இனி நாயகியாக அபிராமி நடிக்க இயலாது. குணச்சித்திர வேடம் அவரது மனதுக்கு உகந்த மாதிரி அமைந்தால் தொடர்ந்து நடிக்க தயாராக இருக்கிறார்.
 
மனது வைக்க வேண்டியது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும்தான்.
 

Share this Story:

Follow Webdunia tamil