Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலாமுக்கு சலாம் - கமலின் கவிதாஞ்சலி

கலாமுக்கு சலாம் - கமலின் கவிதாஞ்சலி
, வியாழன், 30 ஜூலை 2015 (08:11 IST)
அபதுல் கலாம் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைநட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன், கவிதை வடிவில் தனது அஞ்சலியை தெரிவித்துள்ளார். அந்தக் கவிதை -

கலாம்களும் கமால்களும்

கமல்களும்

இலாதுபோகும்

நாள்வரும்

இருந்தபோது

செய்தவை

அனைத்துமே

கணிப்பது

ஹெவன் என்று

ஒருவனும்

பரம் என்று ஒருவனும்

ஜன்னத்தென்று ஒருவனும்

மாறி மாறிச் சொல்லினும்

இகத்திலேயவன்

நடந்த பாதையே

புகழ் பெறும்

நிரந்தரம் தேடுகின்ற

செருக்கணிந்த

மானுடர்

தொண்டருக்கடிப்பொடி

அம்மெய்யுணர்ந்த நாளிது

புகழைத் தலையிலேந்திடாது

பாதரட்சையாக்கிய

கலாம் சாஹெப்

என்பவர்க்கு

சலாம் கூறும் நாளிது

Share this Story:

Follow Webdunia tamil