Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் நினைச்ச மாதிரி என்னை படத்தை எடுக்க விடலை: ஆதிக் ரவிச்சந்திரன்

நான் நினைச்ச மாதிரி என்னை படத்தை எடுக்க விடலை: ஆதிக் ரவிச்சந்திரன்
, செவ்வாய், 27 ஜூன் 2017 (23:46 IST)
கடந்த சில வருடங்களில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் அளவுக்கு எந்த படமும் இந்த அளவுக்கு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்ததில்லை ஒருசில விமர்சகர்கள் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை திரையுலகில் இருந்தே துறத்த வேண்டும் என்று எழுதியிருந்தனர்.






இந்த நிலையில் மிகவும் சோகத்துடன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது: நான் நினைச்ச மாதிரி முழுப்படமும் எடுத்திருந்தா இந்த மாதிரியான விமர்சனம் வந்திருக்காது. எடுத்த வரைக்குமே நான் நினைச்சதை முழுசா படத்துல கொண்டுவர முடியலை. இன்னும் சொல்லப்போனா, இந்தப் படம் எந்த மாதிரியான சூழல்ல எடுக்கப்பட்டதுனு ரசிகர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனாலதான் ரசிகர்கள் மத்தியில் இவ்ளோ வெறுப்பு.

இதப்பத்தி நான் பேச விரும்பல. ஆனா, ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன்... நான் சொல்ல வந்த விஷயத்துல, 25 சதவிகிதம்தான் படத்துல வந்திருக்கு. நான் தயாரிப்பாளருக்காக விட்டுக்கொடுக்கப் போயி படம் பாதில நின்னுருச்சுனு நினைச்சு... ப்ச்... வேண்டாங்க! இதப் பத்தி நான் பேச விரும்பலை. ஆனா, இப்போ எல்லா தப்பும் என் மேல விழுந்திருச்சு. பரவாயில்லை!' என்று விரக்தியுடன் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனின் பிக்பாஸ்: ஜூலியை ரவுண்டு கட்டி அடித்த ஆர்த்தி-காயத்ரி