Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெண்டு நாளை தொடர்பு எல்லைக்கு அப்பால்…. புகைப்படத்தோடு A R ரஹ்மான் வெளியிட்ட தகவல்!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (16:00 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ரஹ்மான் தற்போது மலையாளப் படமான ஆடுஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்திய சினிமா ஐகான்களில் ஒருவரான ஏ ஆர் ரஹ்மான் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ர, பத்து தல, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவர் மலையாளத் திரைப்படமான ‘ஆடுஜீவிதம்’ படத்துக்கும் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் கடந்த நான்கு ஆண்டுகளாக உருவாக்கத்தில் உள்ளது. சவுதி அரேபியாவில் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழிலில் சிக்கிக்கொண்ட இந்தியர் ஒருவரின் கதையே ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம்.

இந்நிலையில் ரஹ்மான் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் பாலைவனத்தில் ஓட்டகங்கள் நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரஹ்மான் “இரண்டு நாட்களுக்கு செல்போன் இல்லை, இணையம் இல்லை. ஆடுகளும் ஓட்டகங்களும்தான் நண்பர்கள்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் இந்த பதிவோடு “ஆடுஜீவிதம்” என்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங், இயக்குனர் பா ரஞ்சித் நெருங்கிய நண்பரா? அதிர்ச்சி தகவல்..!

ஸ்ருதிஹாசனை ’கூலி’ படத்தில் இணைந்த ‘பிகில்’ நடிகை.. ரஜினிக்கு இருவரும் மகள்களா?

சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும்.. மருத்துவரின் பதிவுக்கு விளக்கம் அளித்த சமந்தா..!

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments