Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“வளர்ந்து வாங்க ரமணா 2 எடுப்போம்… “ சண்முகபாண்டியனை வாழ்த்திய இயக்குனர் முருகதாஸ்!

vinoth
வெள்ளி, 16 மே 2025 (08:46 IST)
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான  அடையாளத்தைப் பெற்று தந்தது.

இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட படை தலைவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மே 23 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்ட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பேசும் போது “காக்கிச் சட்டையிலும், கதர் சட்டையிலும் விஜயகாந்த் சார் போன்ற ஒரு அழகனைப் பார்த்ததில்லை. அவரின் கண்கள் சக்தி வாய்ந்தவை. இப்போது அதே போன்ற கண்களை நான் சண்முக பாண்டியனிடம் பார்க்கிறேன். வளர்ந்து வாங்க நாம ரமணா 2 பண்ணுவோம்” எனக் கூறியுள்ளார். படை தலைவன் படத்தில் விஜயகாந்த் A I தொழில் நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments