Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுதபூஜை அன்று வெளியாகும் முருகதாஸ் படத்தின் அப்டேட்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (13:34 IST)
முருகதாஸ் அடுத்து இயக்கும் வித்தியாசமான கதைக்களன் கொண்ட படத்தின் அறிவிப்பு ஆயுதபூஜை அன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது தனது அடுத்த படத்துக்காக பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருகிறாராம்.

இந்நிலையில் இப்போது தனது அடுத்த படத்துக்கான திரைக்கதையை முடித்து விட்டாராம். இந்த படத்தில் கதாநாயகனோடு ஒரு முக்கிய வேடத்தில் குரங்கு ஒன்று நடிக்க உள்ளதாம். இதற்காக அனிமேட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தில் குரங்கை உருவாக்க உள்ளார்களாம். இந்த படம் தனக்கு திருப்புமுனையாக இருக்கும் என முருகதாஸ் நம்பிக்கையோடு உழைத்து வருகிறாராம். இந்நிலையில் இந்த படத்தை பற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பு வரும் அக்டோபர் 14 ஆம் தேதி ஆயுத பூஜை அன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

நீ என் படத்தில் நடி.. நான் உன் படத்துல நடிக்கிறேன்.. கார்த்தி - நானி இடையே நட்பு ஒப்பந்தம்?

சினிமாவில் அறிமுகமாகும் தேவயானி மகள்.. தியாகராஜன் - பிரசாந்த் கொடுக்கும் வாய்ப்பு..!

அஜித்தை சந்திக்க துபாய் செல்கிறாரா தனுஷ்? கதை ஓகே ஆனால் எப்போது படப்பிடிப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments